Friday, June 5, 2026
No menu items!

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்துள்ள வாய்ப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் இறுதிப் போட்டிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். பி.சி.பி.யினால் முன்மொழியப்பட்ட அட்டவணையை எந்த மாற்றமும் செய்யாமல் ஐசிசி மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, 2025 சாம்பியன்ஸ் டிராபியில்...

தானம் செய்த இலங்கை…!

பாகிஸ்தானுக்கு கண் கருவிழிகளை தானம் செய்வதை  இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. கொவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து இது நிறுத்தப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாகூருக்கு அனுப்பப்பட்ட ஐந்து வெண்படலங்களின் சமீபத்திய நன்கொடை, பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் பணியாளர்கள் குழுவினால் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகப் பெறப்பட்டது...

பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது..!

பாகிஸ்தானை சேர்ந்த  57 வயதான பெண் ஒருவர் 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்துள்ள நிலையில்  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் கீழுள்ள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஹெரோயின் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என...

T-20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல்….!

T20 உலகக் கிண்ண போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் (CWI), அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. T20 உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் ஆண்டிகுவா...

உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறார் மோடி

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவத் சௌத்ரி, காங்கிரஸ் தலைவர் ராகுலை புகழ்ந்திருப்பதன் மூலம் காங்கிரஸ் - பாகிஸ்தான் இடையேயான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்தபோதெல்லாம் பாகிஸ்தான் நாட்டுத்...

நியூசிலாந்து அணியை அறிவித்த இரு சிறுவர்கள்..!

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்து அணியை இரு சிறுவர்கள்...

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  பெண்ணுக்கு ‘இதயம்’ கொடுத்த இந்தியா..!

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா சென்றுள்ளார். அப்போது இதயத்தின் இடது புறத்தில் இரத்தத்தை உந்தி...

விமானத்துக்குள் எலி! – 3 நாட்களாக தேடல்..!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் எலியொன்று புகுந்து கொண்டதனால் அதனை கண்டுபிடிக்க மூன்று நாட்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திலே இவ்வாறு எலி புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் எலியொன்று புகுந்துள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்ததனைத் தொடர்ந்து இந்த எலியை கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்கள் சென்றதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்...

பல குழப்பங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும்...

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img