பாகிஸ்தானுக்கு கண் கருவிழிகளை தானம் செய்வதை  இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது.

கொவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து இது நிறுத்தப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாகூருக்கு அனுப்பப்பட்ட ஐந்து வெண்படலங்களின் சமீபத்திய நன்கொடை, பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் பணியாளர்கள் குழுவினால் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகப் பெறப்பட்டது என உயர்ஸ்தானிகர் அட்மிரல்  தெரிவித்துள்ளார்.

இலங்கை உலகிற்கு 88,000 க்கும் அதிகமான கண் கருவிழிகளை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன் அவற்றில் 36,000 க்கும் அதிகமானவற்றை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் இட்ரிஸ் அத்மானி ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here