Monday, June 8, 2026
No menu items!

பிரதேச சபை

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய SJB!

அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மூன்று வாக்குகளை அதிகமாக பெற்று அக்குரணை பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார். அக்குரணை பிரதேச சபையில்...

மன்னார் சுயாதீன இளைஞர் சுயேட்சை குழு ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவு!

மன்னார் -நானாட்டான் பிரதேச சபையில் சுயாதீன இளைஞர் குழுவாக போட்டியிட்ட சுயேட்சை குழுவினர் தமது ஆதரவை ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக சுயாதீன இளைஞர் குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன் தெரிவித்தார். மன்னாரில்  இன்றைய தினம் (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல கட்சிகள் தங்களிடம் ஆதரவு கோரி இருந்த...

ஊழல் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் – நாமல்!

குறைந்த வருமானத்துடன் அரசியலுக்கு வரும் உறுப்பினர்கள் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் என விவசாயம் மற்றும் கால்நடைத் துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார். பொல்பிதிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (02.06.2025) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், “பொல்பித்திகம பிரதேச சபையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு நகர சபை...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள் நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று (19/05/2025) திங்கட்கிழமை...

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்  நியமன சர்ச்சை  – சி.வி.கே சிவஞானம் விளக்கம்!

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றையதினம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் வாக்களிப்பு நடவடிக்கைகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இந்த தேர்தல் இடம்பெறுவதோடு மக்கள் காலை 7.00 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.

இலஞ்சம் பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வருவாய் ஆய்வாளர் ஒருவர் கைது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்மீமன பிரதேச சபைக்கு போட்டியிடும் வருவாய் ஆய்வாளர் ஒருவர் ரூ.25,000 இலஞ்சம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். காலியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இந்த ஆண்டுக்கான வணிக உரிமத்தை வழங்குவதற்காக சந்தேக நபர் இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று அந்த ஹோட்டலின் ஒரு அறைக்குள் இலஞ்சம் வாங்கியபோது அவர்...

கைக்கோடாரி சின்ன சுயேட்சை குழுவின் அலுவலகம் திறந்து வைப்பு..!

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 02 இன் 10ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றைய தினம் திங்கட்கிழமை தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனால் திறந்து வைக்கப்பட்டது. தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கில் சுயேட்சை குழு - 2 இல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனது வேட்பாளர்களை ஆதாரித்து, கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ள சுலக்சன்...

கிளிநொச்சி மாவட்டத்தில் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாக மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 1,02,387 பேர் இந்த உள்ளூராட்சி...

கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா, மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார். 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர். நாளை 17.04.2025 முதல் வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img