Friday, May 15, 2026
No menu items!

பொகவந்தலாவ

பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள்  சம்பள அதிகரிப்பை எதிர்த்த எதிர்க்கட்சியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் நேற்றைய தினம் (16.11.2025) அரசாங்கத்தின் 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினர் இது சட்டவிரோதமான கொடுப்பனவு என குறிப்பிட்டு தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் ஊர்வலமாக...

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்த மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு!

பொகவந்தலாவ மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்த ஐந்து பல்கலைகழக மாணவர்கள், இன்று (14) மோரா தோட்ட பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டபோது மரத்திலிருந்து குளவிக்கூடு விழுந்து அவர்களை தாக்கியது. இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்களும் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பொகவந்தலாவ காவல்துறையினர்...

பொகவந்தலாவவில் 13 வயது சிறுமி மரணம்: தொட்டிலில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், 13 வயது சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (14) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர்கள் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே...

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!!!

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக...

ஹட்டன் பிரதான வீதியில் பாரவூர்தியுடன் கார் மோதி விபத்து!

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (30) காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று குறித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிர்த் திசையில் வந்த பாரவூர்தியுடன் கார் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து...

சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்நத 38 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று (6)  உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து சடலம் மீட்பு..!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த சடலம், காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் அமைப்பின் ஊடாக இழுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பு வலையில் சிக்குண்டு இருக்கலாம்...

அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு…!

பொகவந்தலாவ மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (30) காலை பொகவந்தலாவ பொகவான தோட்ட பகுதியில் உள்ள கெசல்கமு ஓயாவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்ட 35 தொடக்கம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது…!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

குளவிக்கொட்டில் 7 பேர் வைத்தியசாலையில்..!

பொகவந்தலாவ - கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் ஐவர் தோட்ட மருத்துவமனையிலும் ஏனைய இருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதாரவைத்தியசாலைக்கு...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img