Thursday, June 11, 2026
No menu items!

மேலதிக விசாரணைகள்

அநுராதபுரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக மேலதிக...

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிபகிஷ்கரிப்பு!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (07) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள், நீதிமன்ற உத்தரவு இன்றி காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் குமாரவடிவேல் குருபரன், “இது சட்டத்தின்...

மாளிகாவத்தை பகுதியில் ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் பறிமுதல் – நால்வர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சுங்கச் செலுத்தாமல் நாட்டிற்குள் கடத்தப்பட்ட ரூ.10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மொபைல் போன்கள், வாசனை திரவியங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மாளிகாவத்தையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் நால்வர் மாளிகாவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது...

கொழும்பு முகத்துவாரத்தில் கைக்குண்டுகள் அடங்கிய பை கண்டுபிடிப்பு!

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து 10 கைக்குண்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பை, முகத்துவாரம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த வாகன தரிப்பிடத்தில் உள்ளதாகக் காணப்பட்டு, உடனடியாக பயங்கரவாத விசாரணை பிரிவின் (TID) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட சோதனையிலேயே பையின் உள்ளே 10 கைக்குண்டுகள் இருப்பது...

பெரும் அளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், பெரும் அளவிலான ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிவர்தன வீதிப் பகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த 33...

உடல் பாகத்துக்குள் மறைத்து தங்கம் கடத்திய பெண் விமான நிலையத்தில் வைத்து கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் உடல் பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தியதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் காங்கேசந்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பெண் வந்தடைந்த போதே இடம்பெற்றது. சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சந்தேகத்திற்கிடையிலான சோதனையின் போது,...

பெலியத்தையில் பாடசாலை பேருந்து விபத்து – 16 மாணவர்கள் காயம்!

பெலியத்த – வீரகெட்டிய வீதியில், இன்று காலை 7.30 மணியளவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து, உடனடியாக பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தற்போது சிகிச்சையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேருந்து வீதியின் ஓரத்தில் மோதி நின்றுள்ளதாக தகவல் வழங்கியுள்ளார். தற்போது,...

முச்சக்கர வண்டிக் கொள்ளை: மூவர் கைது !

தொடர்ச்சியாக நடந்த முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூவரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, அவர்கள் வாடகைக்கு போவதுபோன்று முச்சக்கர வண்டிகளில் பயணித்து, சாரதிகளின் முகத்தில் மிளகாய்த்...

கைகலப்பு; பொலிஸ் சார்ஜன்ட்க்கு நேர்ந்த கதி!

நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 24 ஆம் திகதி ஹொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணும் பெண்ணும் வேகமாக பயணித்துள்ளனர். இவர்களை சோதனை செய்ய...

படலந்த அறிக்கை தொடர்பில் முதலாவது வாக்குமூலத்தை லால்காந்தவிடம் பெற்றுகொள்ள வேண்டும்; தலதா அத்துகோரள!

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் விவசாய அமைச்சர் கே.டீ லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 1987/89...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img