Tuesday, April 21, 2026
No menu items!

மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் நேற்று மாலை...

யாழ்ப்பாணம் மானிப்பாய் – கட்டுடை சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோடியதாகவும் வேறொருவரை பொலிஸார் கைது செய்ததாகவும்...

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றுமுன்தினம் (22/07/2024) திங்கட்கிழமை  உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிவலிங்கம் (56 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உரும்பிராயில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக...

அம்பியுலன்ஸே எமனான சோகம்…!

இன்று (19.07) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். காலி - கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு...

கதிர்காம உற்சவத்தில் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல்…!

கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர். கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள், முச்சக்கரவண்டிகளின் பெட்டரி உட்பட உதிரிப்பாகங்கள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள்...

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இறுதி காலத்தில் சில மாதங்கள் இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா 11/07/2024 இன்றுஅதிகாலை  யாழ்போதனாவைத்தியசாலைல் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் வீதியில் அமைக்கப்படுகின்ற பாலத்தின்  பாதுகாப்பற்ற  சமிஞ்சை ஒன்றின் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது. இந்  நிலையில் அவர் கிளிநொச்சி பொது...

இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்றைய தினம் (10.07.2024) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகம் எம்பிலிப்பிட்டியவில் கெல்ல ரக்வானா சாலையில் உள்ள கொலோனா பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த  அடையாளம் தெரியாத இருவரே  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேயிலைத் தோட்ட உரிமையாளரான...

கொழும்பில் வாகனங்கள் மீது தாக்குதல் ;ஒருவர் கைது…!

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில், வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பன சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு  அடிமையான, தலங்கம படபொத...

யாழ் பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின்...

ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img