Thursday, April 23, 2026
No menu items!

வர்த்தகர்கள்

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நாடு முழுவதும்  சோதனைகள் தீவிரம்!

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நாடு முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. CAA வெளியிட்ட தகவலின்படி, கிரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 260 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பல வர்த்தகர்கள்...

முட்டை விலையை அதிகரிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரக்கறிகளின் அளவில் வீழ்ச்சி!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகள் அளவு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்திலிருந்து தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளின் அளவும் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மழைக்காரணமாக மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்தமையே இதற்கான காரணம் எனவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, இன்றைய நிலவரப்படி தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ...

ஆர்ப்பாட்டத்தில் குதித்த கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்..!

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் நேற்றைய தினம் (23.01.2025) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடியபடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன் போது தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மெகா...

அரிசி தட்டுப்பாட்டிற்கு முடிவு எப்போது? – வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்..!

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (1/10/2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும்...

முட்டையின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

சந்தையில் தற்போது முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கிடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத்...

வெங்காயத்தின் விலையில் மாற்றம்!

ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 -...

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில்...

யாழில் 25இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய இருவர் கைது…!

சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25இலட்சம் ரூபாய் பெறுமதியான 16பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்தாம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டுத் தப்பித்திருந்தனர். கணவன்,...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக முதல் காணப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.    
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img