Wednesday, June 10, 2026
No menu items!

வெள்ள அனர்த்தம்

வானிலை எச்சரிக்கை! – அடுத்த ஒரு வாரம் மக்கள் மிக அவதானம்!

எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப்...

தொடரும் விவசாயிகளின் அவலம்..!

என்றும் இல்லாதவாறு இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் வயல்கள் வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியாக வெள்ள நிலமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அத்துடன் தமது தோள்களிலே...

வெள்ளத்ததில் தத்தளிக்கும் மக்கள் – அரசின் நடவடிக்கை என்ன?

தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுகுளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவிளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை ஜயன்கோயிடி பெரியகுளம், ஊரியான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த...

வடமாகாண பொறியியலாளர்களால் மக்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைப்பு…!

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 300 குடும்பங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 250 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவில் 50 குடும்பங்களுக்குமாக சுமார் 600 குடும்பங்களுக்கான பொதிகள் வழங்கி...

கிளிநொச்சியில் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவு..!

கிளிநொச்சி, புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடனைப்பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில் தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உரிய...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!

வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து, மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால்  பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர். வெள்ளநீர்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன் எம்.பி கோரிக்கை..!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (28.11.2024) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 12 முகாம்களில் தங்க வைப்பு..!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில், 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யா/கொடிகாமம் போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில், 47...

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்..!

ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். பல விவசாய நிலங்களும் நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்1043...

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்..!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றையதினம் (24.11.2024) யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றிருந்தார். நேற்று (24.11.2024) காலை யாழ்ப்பாணம் - ஜே - 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன்,...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img