True caller அறிமுகப்படுத்தியுள்ள “AI Call Scanner ” செயற்கை நுண்ணறிவு குரல் போலி செயலிகளை கண்டறிந்து எச்சரிக்கும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
True caller, ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் பிரபலமான அப்ளிகேஷன், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய பக்கம் ஒன்றை திருப்பி இருக்கிறது.
AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலை போல செயற்கை நுண்ணறிவு (AI) ஐ பயன்படுத்தி வரும் போலி அழைப்புகளை கண்டறிய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI குரல் பிரதி செயலி தொழில்நுட்பம் மேம்பட்டு, எளிதில் கிடைக்கும் வகையில் ஆகி வருவதால், குற்றவாளிகள் நம்பகத்தகுந்த மோசடிகளை உருவாக்க இதை பயன்படுத்துகின்றனர்.
இந்த மோசடிகளில், வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அல்லது உறவினர்கள் போன்ற நம்பகமான நிறுவனங்களை போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது பணத்தை அனுப்புவதற்கோ ஏமாற்றுகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை அடையாளம் காணல்: ஒரு அழைப்பு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும்போது, True caller அப்ளிகேஷனில் உள்ள எளிய டேப்பைப் பயன்படுத்தி AI கால் ஸ்கேனரை செயல்படுத்தலாம். குறுகிய மாதிரியை பதிவு செய்தல்: அழைப்பாளரின் குரலின் ஒரு சிறிய பகுதியை Scanner சிறிது நேரம் பதிவு செய்கிறது.
AI குரலை பகுப்பாய்வு செய்கிறது: True caller இன் மேம்படுத்தப்பட்ட AI மாடல், குரல் மாதிரியை பகுப்பாய்வு செய்து, உண்மையான மனித பேச்சுக்கும் AI உருவாக்கிய குரலுக்கும் உள்ள தனித்துவமான பண்புகளை அடையாளம் காண்கிறது.
உடனடி பதில்: “மனிதர் கண்டறியப்பட்டது” அல்லது “AI குரல் கண்டறியப்பட்டது” என்ற செய்தியுடன் பயனர்கள் உடனடி முடிவுகளைப் பெறுவார்கள்.
மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்த புதுமையான தொழில்நுட்பம் மதிப்புமிக்க கருவியாக இருக்கும். AI உருவாக்கிய குரல்களை அடையாளம் காண்பதன் மூலம், பயனர்கள் மிகவும் கவனமாக இருந்து ஏமாற்றுபவர்களின் தந்திரைகளுக்கு பலியாகாமல் இருக்க முடியும்.
True caller இன் AI Call Scanner தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.மேலும் இந்த அம்சம் True caller இன் பிரீமியம் சந்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.