ஏழு வயது சிறுவன் இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தரம் 2இல் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுவனே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடொன்றில் பணிபுரியும் மேசனின் உதவியாளர் ஒருவரே இந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இந்த சிறுவனை பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இளைஞனை கைது செய்வது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிங்குருகடுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here