செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை அமைக்கும் திட்டமொன்றை தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு மில்லியன் புவிவாசிகளை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறான சூழலை அமைப்பதற்காக ஒரு தன்னிறைவு சூழலியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பூமியிலிருந்து எவ்வித விநியோகம் தடைப்பட்டாலும் செவ்வாய் கிரகத்தில் வாழும் மக்கள் பிரச்சினையின்றி வாழ முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here