Tamil News Channel

Blog Post

Tamil News Channel > News > திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (30) இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ள நிலையில், யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 353.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை விலை 425.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 409.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *