வவுனியா, மதுரா நகர் பகுதியில் நேற்றைய தினம் (06)மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.