புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் அங்குரார்ப்பண கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வகித்த பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளார்.








