நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை வாபஸ் பெற்று சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியின் ஆதரவை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடம்பஹல ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி விக்ரமசிங்கவின் வேட்புமனுவை ஆதரிக்குமாறு பௌத்த மாநாட்டின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபயராமய ஆலயத்தின் பிரதம அதிபரும் கொழும்பு பல்கலைக்கழக வேந்தருமான வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்,” என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தொடம்பஹல ராகுல தேரர், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்தால் ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதும் நாட்டின் உண்மையான மதம், பாதுகாப்பு மற்றும் மொழிக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.
சரியான முடிவை எடுத்து தனது மகனின் வேட்புமனுவை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டியது முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
“நீங்கள் ஒரு உண்மையான தலைவர் மற்றும் தேசபக்தர் என்றால், இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் நாட்டுக்காக இதைச் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சரியான நேரத்தில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக ராகுல தேரர் தெரிவித்துள்ளார். “நமல், சரியான நேரம் வரும்போது உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதைக்கு நீங்கள் ஒதுங்கி இருக்க வேண்டும்.







