இலங்கையில் வீட்டுக் கடன் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு (FCEJ) எச்சரித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் கொள்ளையடிக்கும் நுண்நிதி வலையமைப்புகளில் சிக்கி தவிக்கின்றனர் என்றும், அரசு அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கடுமையான பொருளாதார சிக்கல்கள் காரணமாக பல குடும்பங்கள் சொத்துக்களை விற்று, உணவைத் தவிர்த்து, கடன் மிரட்டல்களுக்கு ஆளாகின்றன.
புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை மசோதா பிரச்சினையை தீர்க்காமல் மேலும் மோசமாக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு (FCEJ)எச்சரித்துள்ளது.
அரசாங்கம் தலைமையிலான கடன் நிவாரணத் திட்டம் மற்றும் கடன்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.







