ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவில் கலந்து கொண்டு, நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறப்புரை ஆற்றுவார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 03 அன்று வியட்நாமுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசு முறைப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நேற்று ஹனோயில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவில், வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அன்புடன் வரவேற்றார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) பொதுச் செயலாளர் மற்றும் வியட்நாமின் வணிக சமூக உறுப்பினர்கள் உட்பட பல பங்குதாரர்களுடன்
ஜனாதிபதி மேலும் பேச்சுவார்த்தை நடத்தினார் . வியட்நாமுக்கான அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தீவுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







