உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
இன்று மதியம் கட்சியின் அங்கிகரிக்கப்பட்ட முகவரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் தலைமையில் கட்சி உறுப்பினர்களால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.










