கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது என புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

கர்தினால் தமக்கே உரித்தான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதோடு, இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதைத் தெளிவாகவும், பொது மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் நாட்டின் பொதுப் போக்குகள் குறித்த விரிவான பார்வையையும் கொண்டுள்ளார்.

இதனால், அவரின் கருத்துகள் அரசின் நடைமுறைகளைப் பாதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் சுதந்திரமாகவும், சட்டத்திற்கேற்பவும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here