இலங்கையில் அதன் 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக அதானி கிரீன் எனர்ஜி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் மேற்கோள் காட்டியது.
புதிய குழு விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதானி கிரீன் நிறுவனம் இலங்கையின் முதலீட்டு வாரியத்திடம் “மரியாதையுடன் விலகும்” முடிவைத் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் எதிர்கால ஒத்துழைப்புகளுக்குத் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அதானி குழுமத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.








