கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்குவின் கூற்றுப்படி, நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி குழுமத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதியமைச்சர் கொடித்துவக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு முனையங்களும் பூர்த்தி செய்யப்படுவதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் வருடாந்த கொள்கலன் கையாளும் திறன் 8 மில்லியனில் இருந்து 13 மில்லியனாக உயரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி செயல்முறை மற்றும் சர்வதேச வர்த்தகத்தை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








