மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பதாகவும் சில கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைகளுக்கு விற்பதற்காக கடை உரிமையாளர்கள் அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம் அரிசி இல்லை என்று கூறி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் விலைக்கு அரிசியினை விற்று இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபடும் வர்த்தக முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய பொருளான அரிசியினை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here