காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் ஒருவர் பலியானார்.
இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு உந்துருளிகளும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சேவையிலிருந்து விலகியிருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.








