பிரதமர் ஹரினி அமரசூரிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுத் தினத்தில் சகல பேதங்களையும் மறந்து அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக் கைகோர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான சுதந்திரமானது தேசிய இறைமை மாத்திரமல்ல. கௌரவத்துடனும், நீதியுடனும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும் வாழும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.








