2025 ஜூலை 29ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில், நியூக்ளேர் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், நான்கு வயதுடைய ஒரு சிறுவனுக்கு அவரது தாய், மாண்டிராக்ஸ் (Mandrax) போதைப்பொருள் கலந்த பைப்பை கொடுத்து புகைக்க ஊக்குவிக்கும் கடுமையான காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குழந்தை நலத்துக்கே நேரடியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இந்த காணொளி வெளியானதும், மக்கள் குழப்பமடைந்து சம்பந்தப்பட்ட தாயின் வீடு நோக்கி திரண்டனர். குழந்தை பின்னர் சோபியாடவுன் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடமொன்றில் தற்காலிகமாக வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தாயுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிராக குழந்தை மீதான வன்முறை மற்றும் பராமரிப்பு தவறுகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் வழக்கு ஜூலை 31ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பை மீண்டும் நினைவூட்டுவதாகவும், இத்தகைய கொடூரச் செயல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.








