புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரீதி பத்மன் சூரசேனவுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
உத்தியோகபூர்வ உரையில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதித்துறையின் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், வழக்குகள் விரைவாகத் தீர்வதற்கும், பொதுமக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கவும், நீதித்துறை அமைப்பினை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.








