அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எம்.பி.சுமணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் பத்து அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த வழக்குகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.






