பதுளை, நமுனுகுல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பசறை-பதுளை சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, பாதுகாக்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியை அழித்துள்ளது.
தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.








