2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை (10/2/2025) நாட்டிலிருந்து புறப்படுகிறார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

2025 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல துறைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here