நுவரெலியா மாவட்டத்தில் 5 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று(15.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த காலங்களில் மக்களைக் கவனத்தில் கொள்ளாத பலர் தற்போது மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு முயல்வதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.






