கொழும்பு-கண்டி சாலையில், வாரக்காபொல, தும்மலதெனியா பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக வாரக்காபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி எதிர் திசையில் சென்ற மற்றொரு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here