பாகிஸ்தானில் இந்தவருடத்தின் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் (24/1/2025) டுபாயிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்துக்கு சென்ற ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வழக்கமாக, குரங்கம்மை என்பது இரண்டு முதல் நான்கு வாரங்களில் கட்டுப்பட்டுவிடும், தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளுடன் நலமடைந்து விடுவார்கள்.
குரங்கம்மை நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.








