அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிமுல்ல மற்றும் அளுத்கம பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







