பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று கையளித்திருந்தனர்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல். பூநகரி பிரதேச சபைக்கான பதினொரு வட்டாரத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம். கடந்த தேர்தல்களிலும் பதினொரு வட்டாரங்களில் வெற்றி பெற்றிருக்கின்றோம். இம்முறையும் வெற்றி பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம் என தெரிவித்தார்.


[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]






