‘மார்வின் ஜனா’ அல்லது ‘பேக்கரி ஜானா’ என அழைக்கப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை (STF) நடத்திய ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ’பேக்கரி ஜனா’ பொதுவாக ‘ஐஸ்’ என்று அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனுடன் கைது செய்யப்பட்டார்.
பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 24/1/1, முதலாம் தடம், தெவலமுல்ல சந்தி, தெஹிவளை வீதியில் இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர், கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காரில் பயணித்த 17 கிராம் 60 மில்லிகிராம் ‘ஐஸ்’ வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








