பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தலைமை அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தமது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








