இலங்கையின் பல முக்கிய ஊடகவியலாளர்கள் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் விளையாட்டு ஊடகவியலாளரும் இலங்கை தொழில்முறை விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான கருப்பையா ராமகிருஷ்ணன் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

பிரபல ஒலிபரப்பு ஊடகவியலாளர் ஏ.ஆர்.வி.லோஷனும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியை (TPA) பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் உள்ள சமகி ஜன பலவேகய (SJB) சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பிரபல உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர்களான ஸ்ரீலால் வன்னியாராச்சி மற்றும் தனஞ்சய நாரங்கபெத்த ஆகியோர் முறையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) சார்பில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

ஊடகவியலாளர் மகேஷ் சேனாநாயக்கவும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சமகி ஜன சந்தானயவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்றார்.

வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையிலான மக்கள் நல முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் மூத்த ஊடகவியலாளர் எரந்த வணிகசேகர தேர்தலில் போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here