மாகாணசபை தேர்தலுக்கு உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (19) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, மாகாணசபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்றும், உரிய காலத்தில் தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.








