மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று(15.10) மாலை 53 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் காரில் வந்த நபர் ஒருவரால் சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காணவும், கொலைக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.








