மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இரவு ஏற்பட்ட துயரமான விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.

பெரிய மரம் ஒன்று சாலையோரத்தில் சரிந்து, பயணித்த முச்சக்கர வண்டியின் மீது வீழ்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இரண்டரை வயது குழந்தை, 48 வயதான பெண், 57 வயதான ஆண் ஆகிய மூவர் காயமடைந்து மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.20 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டிக்குள் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென மரம் ஒன்று அதன் மீது சரிந்து விழுந்தது.

பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி 37 வயதான ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் மரம் சரிந்து வீழ்ந்ததால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி, அருகில் இருந்த ஒரு கடை ஆகியவையும் சேதமடைந்துள்ளது.

சம்பவத்தையடுத்து தலகொல்ல பகுதியில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here