எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இடம்பெற்ற விபத்தில் ஆறுவயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்று வேனுடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








