முட்டை இறக்குமதி தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் முட்டை உற்பத்தியாளர்களால் முட்டை விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (22.07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







