தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் விக்கிரமசிங்கவிற்கு உள்ள தொடர்பு குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதை நிறுத்துங்கள் அல்லது அவற்றை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு அவர் விக்கிரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.

“நாடு வீழ்ந்தபோது கோத்தபாய ராஜபக்ச என்னை அழைத்தார், நான் மறைந்தேன் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ரணில், கோத்தபாய, பசில் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, மகிந்தானந்தா ஆகியோர் இணைந்து எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிப்பார்களா? அல்லது கோத்தபாய எங்களை அழைத்தார் என்பதை நிரூபியுங்கள்” என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து மஹிந்த ராஜபக்ஷ கூறிய கடந்தகால கூற்றுகளுக்கு சமாந்தரமாக, விக்கிரமசிங்கவின் முந்தைய அறிக்கைகளையும் திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடு மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here