புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று (24) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டமானது கொழும்பு 07, ப்ளவர் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இரண்டு மணி நேர இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








