ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏ. என். ஜே. டி அல்விஸ் அறிக்கையை சமர்ப்பித்த குழுவையும், தன்னையும் குற்றச்சாட்டுவதை விடுத்து, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவ்வாறு இந்த அறிக்கையை ஏற்று கொள்ள வில்லை என்றால் தகுந்த காரணங்களுடன் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here