வெள்ளவத்தை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








