மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன் அம்பாறை மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின் கீழ், 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








