Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாக குற்றம் சுமத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.!

பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிட்டகோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறான...

குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் குடித்ததில் உயிரிழப்பு..!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் (அசிட் திராவகம்) குடித்ததில் உயிரிழந்துள்ளது. தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர், சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அசிட்டையே குழந்தை அருந்தியதாக தெரியவந்ததையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு...

200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிப்பு..!

செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ...

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை..!

துன்ஹிந்த - பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது, ​​கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழகத்தின் 39வது பாடநெறியைச் சேர்ந்த 36 மாணவர்கள், 03 விரிவுரையாளர்கள், குழுவுக்குப் பொறுப்பான ஆலோசகர், பேருந்தில் பயணித்த சிரேஷ்ட இராணுவ...

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு.!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.49 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.10 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த..!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கண்டி கட்டுகஸ்தொட்டை பகுதியில்...

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அதேநேரம் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக மரநடுகை நிகழ்வு….

நாளைய தலைமுறைக்கான என்ற தொனிப்பொருளில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (02.11.2024) மரம் நாட்டப்பட்டது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் மரம் நாட்டப்பட்டது. மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்…

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தெரிவிப்பு..!

எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான இணையவழி முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img