Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது...

வெள்ள நிலமைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்தம் தொடர்பான பாதிப்புக்களை கண்காணித்து ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்...

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

முந்தல் 12 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். குறித்த பகுதியில், நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். இதில், 52 மற்றும் 55 வயதுடைய இருவரே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் இருவரும் தமது குடியிருப்புக்கு அருகில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த நிலையில், அதற்கு வீட்டிலிருந்து கம்பி மூலம் மின்சாரத்தைப் பெற்றுள்ளனர். எனினும், அந்த...

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து , 5...

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியை வரவேற்ற ஜப்பான்!

வீண் விரயம் மற்றும் ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந்த சுகாதார சேவையை உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இசோமாடா (Akio Isomata) இதனைத்...

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்..!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (29.11.2024) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட...

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம்...

கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்..!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29.11.2024) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்...

வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நபர் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக 26.11.2024 அன்று பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்தியமேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று  அடையாளம் காணப்படவில்லை.பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம்...

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று இன்று (29) தடம் புரண்டுள்ளது. அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img