நடிகர் விஷ்ணு விஷால் படத்திற்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஆரியன்.

இயக்குநர் பிரவீன் கே. இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், 3 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் ஆரியன் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 4+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here